/* */

திருவண்ணாமலை அருகே வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது

திருவண்ணாமலை அருகே காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது
X

பிடிபட்ட 9 பேருடன் வனத்துறையினர்.

திருவண்ணாமலை வன சரகத்திற்கு உட்பட்ட பாலியப்பட்டு கிராமம், காப்புக்காட்டில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பலையும், கஞ்சா அடித்து விட்டு போதையில் கறி வாங்கி சென்று கறியை சமைத்து சாப்பிடும் கும்பலையும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள், பெரிய பாலியப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

அவர்கள் 9 பேரையும் வனத்துறையினர் கைது செய்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். அவர்களிடம் 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, நெற்றியில் பொருத்தும் பேட்டரி டார்ச் லைட், வெடி மருந்து, முயல், உடும்பு, வேட்டை யாட பயன்படுத்தும் வலைகள், கம்பி வலைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 25 Jun 2022 7:26 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  3. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  4. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  5. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  8. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  10. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு