/* */

நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதி

திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி இறந்த மூன்று குழந்தைகளின் குடும்பத்தினருக்கு அமைச்சர் எ.வ.வேலு நிவாரண நிதி வழங்கினார்.

HIGHLIGHTS

நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதி
X

நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை அமைச்சர் எ.வ வேலு வழங்கி ஆறுதல் கூறினார்

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டம். சு, கம்பம்பட்டு கிராமத்ததை சேர்ந்த மாபுகான் என்பவரின் மகள்கள் நஸ்ரின் (வயது 14). நசீமா (வயது 14) மற்றும் ஷாகிரா (வயது 12) ஆகியோர் சு கம்பம்பட்டு ஏரிநீரில் எதிர்பாராதவிதாமக மூழ்கி இறந்துவிட்டனர்.

மேற்படி இறந்துவிட்ட நபர்களின் தந்தை மாபுகானுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் நிதியிலிருந்து உடனடி நிவாரண நிதியாக தலா ரூ.. 50,000/-வீதம் இறந்த மூன்று மகள்களுக்கு ரூ.1,50,000/- திற்கான காசோலையினை பொதுபணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று வழங்கி ஆறுதல் கூறினார் .

மேலும், இத்துயர நிகழ்வு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிக் கவனத்திற்கு கொண்டு சென்று மேற்படி குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மூலம் விரைவில் நிறைவேற்றிதரப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்தநிகழ்வின் போது சட்டமன்ற பேரவைதுணைத் தலைவர் கு, பிச்சாண்டி, ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு. பிரதாப், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வீ. வெற்றிவேல், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Jan 2022 8:37 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்