சிதைந்த நிலையில் ஆண் சடலம்
![சிதைந்த நிலையில் ஆண் சடலம் சிதைந்த நிலையில் ஆண் சடலம்](https://www.nativenews.in/h-upload/2021/03/16/981356-20210316110015.webp)
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேலரணி கீழ்தாங்கள் சாலை அருகில் உள்ள மலையோரத்தில் தலையில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
அப்பகுதி வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்று தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இது கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில் இன்று காலை இறந்த பிரகாஷின் உறவினர்கள், தங்களுக்கு சிலர் மீது சந்தேகம் உள்ளதாகவும். அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரையில் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரி போளூர் செங்கம் சாலையில் வில்வாரணி அருகில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu