/* */

செய்யாறில் முழுமை பெறாத சிறு பாலம் பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி

செய்யாறில் சிறு பாலம் அமைக்கும் பணி முழுமை பெறாததால், பாலத்தை ஒட்டி சாலையில் ஏற்பட்ட பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

HIGHLIGHTS

செய்யாறில் முழுமை பெறாத சிறு பாலம் பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
X

செய்யாறில் சேதமடைந்துள்ள சாலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நகராட்சி சார்பில் கோபால் தெரு பைபாஸ் சாலை சந்திப்பில் பல வருட கோரிக்கைக்குபின் சிறுபாலம் அமைக்கப்பட்டது. அந்த சிறுபாலத்தை ஒட்டி சாலையை இணைக்காமல் விட்டுவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் முரம்பு மண் கொட்டி ஓரளவிற்கு சீர் செய்தனர். கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் சிறுபாலத்தை ஒட்டி சாலை பகுதியில் இருந்து மண் அரித்துச்செல்லப்பட்டு அங்குள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.

இதனால் அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுபற்றி கோபால் தெரு மக்களும், கொடநகர் பகுதி மக்களும் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக கோபால் தெரு பைபாஸ் சாலை சந்திப்பில் சிறு பாலத்தை ஒட்டியுள்ள சாலையை சீரமைக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 27 Sep 2021 2:42 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!