/* */

குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல்: கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல் செய்யப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல்: கலெக்டர் தகவல்
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த உளுந்தை நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதன்படி 2,100 டன் குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது.

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு, வந்தவாசி மற்றும் போளூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் முதன்மை கொள்முதல் மையமாக செயல்படும். இந்த மையங்களில் உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ.63 வீதம் வருகிற 15-ந்தேதி வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. கொள்முதல் செய்யப்படும் உளுந்துக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நில சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய விவரங்களுடன் அந்தந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்

Updated On: 27 April 2022 1:09 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி