/* */

திருவண்ணாமலை: சுற்றுலா தலங்களுக்கு செல்ல அக்டோபர் 10ம் தேதி வரை தடை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள், பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அக்டோபர் 10 ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை: சுற்றுலா தலங்களுக்கு செல்ல அக்டோபர் 10ம் தேதி வரை தடை
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அக்டோபர் 10 ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 3ம் தேதி வரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை உத்தரவு வரும் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்கிற நிலையை அடைய உதவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Oct 2021 3:56 PM GMT

Related News