/* */

காளை விடும் விழாவுக்கு அனுமதி கோரி போராட்டம்

காட்டுக்காநல்லூர் கிராமத்தில் காளைவிடும் விழாவுக்கு அனுமதி கோரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

காளை விடும் விழாவுக்கு அனுமதி கோரி போராட்டம்
X

பைல் படம் 

கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் விழா முன்னிட்டு காளை விடும் திருவிழா நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காணும் பொங்கல் நாளிலேயே ஊரடங்கு உத்தரவு காரணமாக காளைவிடும் திருவிழா நடத்த முடியவில்லை.

கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் காளைவிடும் திருவிழா நேற்று நடத்த அனுமதி கோரி ஆரணி ஆர்.டி.ஒ. கவிதா, டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் காளைவிடும் திருவிழா நடத்த அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மாலை காளைவிடும் திருவிழா நடத்த அனுமதி வேண்டும் என அவ்வூரில் உள்ள மந்தைவெளி பேருந்து நிறுத்தத்தில் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா, உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் சமரசம் செய்தபின் கலைந்து சென்றனர்.

Updated On: 24 Jan 2022 1:29 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  2. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  3. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  5. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  6. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  7. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  8. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  9. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...
  10. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!