/* */

உலக புகையிலை ஒழிப்பு தினம்: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

உலக புகையிலை ஒழிப்பு தினம்: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
X

விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை துவக்கி வைத்த மாவட்ட எஸ்பி மற்றும் டிஆர்ஓ.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை காந்திசிலை அருகே உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்துகொண்டனர். உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பல் மருத்துவ சங்கத்தின் பொருளாளா் வினோத்குமாா், ஒருங்கிணைப்பாளா்கள் சுந்தரேசன், சந்திரபிரபா, வருவாய் ஆய்வாளா் சுதா வட்டார மருத்துவ அலுவலர்கள் , காவல்துறை அதிகாரிகள், இந்திய பல் மருத்துவக் கழக மருத்துவர்கள், செவிலியர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி, மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தனியாா் தொழில்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் ஹேம்நாத் கலந்து கொண்டு, புகையிலையால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய்கள் குறித்து மாணவா்களிடையே எடுத்துரைத்தாா். மேலும், புகையிலையில் 4000 விதமான நச்சுப்பொருள்கள் உள்ளன. அதில் 75 விதமான நச்சு வேதிப்பொருள்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. புகையிலைப் பொருள்களை தொடா்ந்து உபயோகித்தால் உடலில் நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் விரைவில் பாதிப்படையும்.

எனவே, புகையிலைப் பொருள்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, மாணவா்கள் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். மேலும், புகையிலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த ஊா்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா்கள் வெங்கடேசன், காா்த்திகேயன், தனுஷ், தொழில் பயிற்சி நிலைய முதல்வா் அமுதசாகா், உதவி முதல்வா் பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கீழ்பெண்ணாத்தூர்:

கீழ்பெண்ணாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் சார்பில் உலக புகையிலை தடுப்பு தின விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ் பாபு புகையிலை தடுப்பு உறுதி மொழியினை வாசித்தார். மருத்துவர் திவ்யா , சுகாதார ஆய்வாளர் செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

வேட்டவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உலகப் புகையிலை தடுப்பு தின விழிப்புணர்வு கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார் . நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் மருத்துவர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Jun 2023 1:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  2. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  3. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  4. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  7. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  8. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  10. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்