/* */

ஆரணி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

ஆரணி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆரணி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
X

கடை உரிமையாளர் செல்வகுமார்.

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டிக்கு புகார்கள் வந்தது.

அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் உள்பட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது வடுகசாத்து கிராமத்தில் அரசு பள்ளி எதிரே உள்ள யாதவர் தெருவை சேர்ந்த செல்வகுமார் (வயது 41) என்பவருடைய கடையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் செல்வகுமார், கடையில் பணிபுரிந்த கல்லூரி மாணவன் ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 24 Dec 2021 6:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  2. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  3. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  4. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  5. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  6. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...