/* */

ஆரணி தனியார் பள்ளியில் முப்பெரும் விழா: புதிய நீதி கட்சி தலைவர் பங்கேற்பு

ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சியில் உள்ள ஏ சி எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆரணி தனியார் பள்ளியில் முப்பெரும் விழா: புதிய நீதி கட்சி தலைவர் பங்கேற்பு
X

சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கிய ஏசி சண்முகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சியில் உள்ள ஏ சி எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இப்பள்ளியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு மற்றும் பொங்கல் ஆகிய பண்டிகை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற முப்பெரும் கலை விழா நிகழ்ச்சி பள்ளியின் தலைவர் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் ஏ சி. அருண்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதிய நீதி கட்சி தலைவரும் ஏசிஎஸ் குழும நிறுவனருமான ஏ.சி. சண்முகம் பங்கேற்றார்.

இதில் பங்கேற்ற மாணவ மாணவிகள் பெருமாள் ஆண்டாள் மற்றும் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து அசத்தினர்.

இதனை அடுத்து பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, விழிப்புணர்வு நாடகப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை ஒட்டி பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஏசி சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பள்ளி தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு மற்றும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

மேலும் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்ற பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நிர்வாகிகள், புதிய நீதி கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2023 3:22 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...