குழந்தைகளின் விளையாட்டால் விபரீதம்; சிலிண்டர் வெடித்து தாய் உயிரிழப்பு
![குழந்தைகளின் விளையாட்டால் விபரீதம்; சிலிண்டர் வெடித்து தாய் உயிரிழப்பு குழந்தைகளின் விளையாட்டால் விபரீதம்; சிலிண்டர் வெடித்து தாய் உயிரிழப்பு](https://www.nativenews.in/h-upload/2021/07/28/1203173-cylinder-burst.webp)
பைல் படம்.
ஆரணி அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் சமையல் காஸ் திறந்து விட்டதில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஒண்டிக்குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், (வயது 31 ) லாரி டிரைவர். இவரது மனைவி சரிதா, வயது 28. இவர்களுக்கு சஞ்சய், (வயது 5) தாரணிகா (வயது 3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 26 ம் தேதி வீட்டில் குழந்தைகள் விளையாடியபோது, காஸ் சிலிண்டரை திறந்து விட்டுள்ளனர். இதை அறியாமல், அன்று மாலை சரிதா டீ போடுவதற்காக தீக்குச்சியை உரசினார். அப்போது குபீரென தீப்பிடித்து அறை முழுதும் பரவியது. சரிதா மீது தீ பரவி படுகாயமடைந்து, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தால் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu