/* */

விநாயகர் கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு குறித்து தாசில்தார் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை அருகே விநாயகர் கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு குறித்து தாசில்தார் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விநாயகர் கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு குறித்து தாசில்தார் நேரில் ஆய்வு
X

விநாயகர் கோவில் மதில் சுவர் இடிக்கப்பட்ட இடத்தில் தாசில்தார் ஜெகதீசன் ஆய்வு செய்தார்.

திருவண்ணாலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள 5 புத்தூர் கிராமத்தில் பழமையான விஜயநகர பேரரசு கட்டிய விநாயகர் கோவிலை அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.

இந்த கோவிலுக்கு சொந்தமான காலியிடத்தில் சிலர் குடியிருந்து வந்தனர். இதில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஒருவர் தனது பெயருக்கு பட்டா பெற்று, விற்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த கிராமமக்கள் சார்பில் ஆரணி தாசில்தார் மற்றும் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தனர். மேலும் அவர்கள் கோவில் காம்பவுண்ட் சுவரை இடித்து விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் ஆரணி தாசில்தார் ஜெகதீசன் 5 புத்தூர் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை கலெக்டர் ஒப்புதலோடு எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்தார்.

Updated On: 26 Aug 2022 11:22 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகில் கடல் மட்டம் உயர்வதை காட்டும் நாசா கிராஃபிக்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. இந்தியா
    பிரதமர்-போப் சந்திப்பை கேலி செய்யும் பதிவு: கிறிஸ்தவர்களிடம்...
  5. நாமக்கல்
    நாமக்கல் அருகே வெறிநாய்த் தொல்லையால் ஆடுகள் இறப்பு
  6. JKKN
    AI இயக்கம் குறித்த ஆராய்ச்சி!
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் பக்ரீத் சிறப்பு தொழுகை; 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...
  8. திருவள்ளூர்
    ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலய தீமிதி திருவிழா
  9. செங்கம்
    காதல் திருமணம் செய்த மருமகனை கூலிப்படை வைத்து சரமாரியாக தாக்கிய...
  10. JKKN
    உலக இரத்த கொடையாளர் தின கொண்டாட்டம்