/* */

யானைக்கால் நோய் மேலாண்மை உபகரணங்கள் அளிப்பு

அரசு மருத்துவமனையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

யானைக்கால் நோய் மேலாண்மை உபகரணங்கள் அளிப்பு
X

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் மமதா தலைமை தாங்கினார். விழாவில் ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் கலந்துகொண்டு, யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். இதில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, யானைக்கால் நோய் பிரிவு அலுவலர் அசோக்குமார், களப்பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு யானைக்கால் நோய் மேலாண்மை பயிற்சி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கிடேசன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கணேசன், ராதா சின்னகாசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தச்சூா் வட்டார தலைமை மருத்துவா் சுரேஷ்பிரகாஷ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சத்திஷ்குமாா் கலந்து கொண்டு யானைக்கால் நோய் பயிற்சி மேலாண்மை உபகரணங்களை 70-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலா் மோகன்ராஜ் சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்:

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளிகள் நல மாவட்ட அலுவலா் தங்கமணி முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா். முகாமில் மாற்றுத்திறனாளிகளின் ஊனம் குறித்து அட்டை வழங்கினா். மேலும், பழைய அட்டையை பெற்றுக்கொண்டு 102 பேருக்கு புதிய அட்டை வழங்கப்பட்டது. மேலும், ஊனமுற்ற 8 பேருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன முகாமில் சுமாா் 300 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலா் கோவிந்தராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்பாளா் சங்கா், ஆசிரியா் பயிற்றுநா் காா்த்திகேயன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சம்பத், புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் காந்திமதி, அரிமா சங்க மாவட்டத் தலைவா் பழநி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Updated On: 9 March 2023 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  3. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  6. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  8. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  9. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு