/* */

திண்பண்டங்கள் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து

கியாஸ் ரெகுலேட்டரில் ஏற்பட்ட கசிவினால் தீப்பிடித்து கரும்புகை வெளியானது. இதனை கண்டதும் அக்கம் பக்கத்தினர் கடைக்குள் வந்து சிலிண்டரை தூக்கி வீசினர்.

HIGHLIGHTS

திண்பண்டங்கள் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
X

கடையில் வைக்கப்பட்டிருந்த சாமான்கள், மின்சாதன பொருட்கள், மின் வயர்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆகிய காட்சி.

ஆரணி மண்டி வீதியில் தொப்பை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தின்பண்டங்களான முறுக்கு, எல்லடை, அதிரசம் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை கடையைத் திறந்து கடைக்குள் இருக்கும் கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது திடீரென தீப்பிடித்தது.

தொடர்ந்து கியாஸ் ரெகுலேட்டரில் கிராஸ் கசிவினால் தீப்பிடித்து கரும்புகை வெளியானது. இதனை கண்டதும் அக்கம் பக்கத்தினர் கடைக்குள் வந்து அங்கிருந்த சிலிண்டரை தூக்கி வெளியே வீசினர்.

மேலும் தகவல் அறிந்ததும் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) விஜயகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை மேலும் பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இதில் கடையில் வைக்கப்பட்டிருந்த சாமான்கள், மின்சாதன பொருட்கள், மின் வயர்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. ஆரணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 March 2022 6:17 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...