/* */

நெசவு தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரம் பறிப்பு

ஆரணி பஸ் நிலையத்தில் நெசவு தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர் பறித்து சென்றார்.

HIGHLIGHTS

நெசவு தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரம் பறிப்பு
X

மாதிரி படம் 

திருவண்ணாமலை அருகே தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 46). நெசவு தொழிலாளி. இவருக்கு ஜானகி என்ற மனைவியும், 2 மகள், 1 மகன் உள்ளனர்.

இவர் ஆரணியில் வேலை செய்து வருகிறார். வேலைக்கு சென்று விட்டு பாலாஜி சம்பள பணத்துடன் சொந்த கிராமத்திற்கு செல்வதற்கு ஆரணி பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதனை பயன்படுத்தி பாலாஜியின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.30 ஆயிரத்தை பிளேடால் அறுத்து மர்ம நபர் திருடி சென்றான்.

பணத்தை பறிகொடுத்த தொழிலாளி, சம்பளத்தை இழந்ததால் கதறி அழுதுள்ளார். பின்னர் ஆரணி டவுன் போலீசில் பாலாஜி புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை கொண்டு பணத்தை திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Updated On: 13 Jan 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...