/* */

பொதுமக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம்

உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட புகார்கள் 34 மற்றும் சி.எஸ்.ஆர். 74 புகார்கள் உள்பட 117 புகார்களுக்கு தீர்வு

HIGHLIGHTS

பொதுமக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம்
X

ஆரணியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பாஞ்சாலியம்மன் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் காவல்துறை சார்பில் சிறப்பு முகாம் ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில் நடந்தது.

முகாமில் ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ள (சி.எஸ்.ஆர்.) 74 வழக்குகளும், முதல்வர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட 34 புகார்களும், மேலும் நேரில் 28 புகார்களும் அளிக்கப்பட்டது, இவற்றில் நேரில் வழங்கிய 9 புகார்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 19 புகார்களுக்கு ஒரு வார காலத்தில் தீர்வு காணப்படும் என அந்தந்தக் காவல் நிலையத்திற்கு தகவல்கள் அனுப்பப்பட்டது. உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட புகார்கள் (கரண்ட் பேப்பர்) என்று சொல்லக்கூடிய புகார்கள் 34-ம் தீர்வு காணப்பட்டது. சி.எஸ்.ஆர். 74 புகார்கள் என மொத்தம் 117 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாவும் டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தெரிவித்தார்.

முகாமில் வருவாய்த்துறையில் மண்டல துணைத் தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோகுல்ராஜன், பி. புகழ், அல்லிராணி, சாலமோன் ராஜா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 March 2022 3:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!