/* */

தூக்கக்கலக்கத்தில் எழுந்து வந்தபோது கால் தவறி விழுந்த டிரைவர் மரணம்

ஆரணி அருகே மொட்டைமாடியில் தூங்கி கொண்டிருந்த டிரைவர் தூக்கக்கலக்கத்தில் எழுந்து வந்தபோது கால் தவறி விழுந்து சாவு

HIGHLIGHTS

தூக்கக்கலக்கத்தில் எழுந்து வந்தபோது கால் தவறி விழுந்த டிரைவர் மரணம்
X

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 32), டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

18-ந்தேதி மொட்டைமாடியில் தூங்கி கொண்டிருந்த அவர் அதிகாலை திடீரென எழுந்து படிக்கட்டு வழியாக இறங்க முயன்றபோது, மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

அதில் பலத்தகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இன்று சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சசிகுமாரின் அண்ணன் தமிழரசன் களம்பூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 24 Feb 2022 2:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  9. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  10. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...