வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு காரிப் பருவ பயிற்சி

வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு காரிப் பருவ பயிற்சி

வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு  அளிக்கப்பட்ட  காரிப் பருவ பயிற்சி 

வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு காரிப் பருவ பயிற்சி அளிக்கப்பட்டது.

சேத்துப்பட்டு உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தின் சார்பில் பெரணம்பாக்கம் கிராமத்தில் 40 விவசாயிகளுக்கு காரிப் பருவ பயிற்சி அளிக்கப்பட்டது.

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் பெரணம்பாக்கம் கிராமத்தில் கலைஞரின் அ னை த்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு காரிப்பருவ பயிற்சி 40 விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாரம் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2024-25ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு காரிப் பருவ பயிற்சி பெரணம்பாக்கம் கிராமத்தில் 40 விவசாயிகளைக் கொண்ட குழுவிற்கு அளிக்கப்பட்டது.

பயிற்சி முகாமில் வேளாண்மை ஆத்மா திட்ட குழு தலைவர் மணிமாறன் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பா, தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவக்குமார், வேளாண்மை அலுவலர் முனியப்பன், வேளாண்மை பொறியியல் துறை அலுவலர் செல்வி சாவித்ரா, காரிப் பருவத்தில் விதை தேர்ந்தெடுக்கும் முறைகள் பற்றியும் மண்பரிசோதனை செய்யும் முறைக ள் பற்றியும் வேளாண்மை அலுவலர் உயிர் உரங்கலான பாஸ்போ பாக்டீரியா பயன்படுத்தும் முறைகள் பற்றியும், செயலி பயன்பாடு பற்றியும் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

மேலும் இப்ப பயிற்சியில் பெரணம்பாக்கம், கிராம ஊராட்சி மன்ற தலைவர், உதவி வேளாண்மை அலுவலர் பாஸ்கரன், உதவி தோட்டக்கலை அலுவலர், ஸ்ரீநாத், தீபிகா, சீனிவாச அறக்கட்டளை அலுவலர் சுகன்யா மற்றும் அத்மா திட்ட அலுவலர் சேகர், உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆனந்தன் பணியாளர்கள்,விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story