/* */

ஆரணியில் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மறியல்

5 மாத நிலுவை சம்பளனத்தை வழங்கக்கோரி ஆரணியில் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஆரணியில் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மறியல்
X

நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி நகராட்சியில் 1 முதல் 18 வார்டு வரை தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 116 துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு 5 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பள பாக்கி கேட்டு அவர்கள் ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆரணி டவுண்காவல் உதவி ஆய்வாளர் சுந்தரேசன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் எதுவாக இருந்தாலும் நகராட்சி அலுவலகத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தி முடியுங்கள். இதுபோன்று சாலை மறியலில் ஈடுபட்டால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கூறி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.

தொடர்ந்து அங்கிருந்து சென்ற அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள்போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் ஒப்பந்த பணியாளர்களிடம் அலுவலர்கள் கூறுகையில், உங்களுக்கு சம்பளம் நாங்கள் தர வேண்டியது இல்லை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றனர். பின்னர் தனியார் ஒப்பந்ததாரர் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் சம்பளம் வழங்கப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Updated On: 14 Aug 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  4. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  5. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  6. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  10. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!