/* */

களம்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்

களம்பூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் மோட்டார்சைக்கிளில் எடுத்து வந்த ரூ.2 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

களம்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்
X

பைல் படம்.

களம்பூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் மோட்டார்சைக்கிளில் எடுத்து வந்த ரூ.2 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

போளூர் துணை தாசில்தார் சிவலிங்கம் தலைமையில் ஏட்டு நிர்மல்குமார், பெண் போலீஸ் சங்கீதா உள்ளிட்ட பறக்கும் படையினர் நேற்று இரவு 11 மணியளவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இலுப்பகுணம் கூட்ரோட்டில் அதிவேகமாக சென்ற ஒரு மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த படவேடு மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்தை வைத்திருந்தார்.

குடும்ப தேவைக்காக பிறரிடம் கடன் வாங்கி பணத்தை எடுத்துச் செல்வதாக அவர் கூறினார். ஆனால், அவரின் கருத்தை பறக்கும்படையினர் ஏற்கவில்லை. இதையடுத்து ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து களம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரி லோகநாதனிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 8 Feb 2022 1:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  9. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  10. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...