/* */

கண்ணமங்கலம் அருகே ரயில்வே மேம்பாலம்: அதிகாரிகள் நேரில் ஆய்வு

கண்ணமங்கலம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

கண்ணமங்கலம் அருகே ரயில்வே மேம்பாலம்: அதிகாரிகள் நேரில் ஆய்வு
X

கண்ணமங்கலம் அருகே கட்டப்படும்  ரயில்வே உயர் மட்ட மேம்பாலம்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் நிலையில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, அப்பணிகளை ஆய்வு செய்தார். கீழ் பள்ளிப்பட்டு வல்லம் பஞ்சாயத்துகளில், ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் அமைய உள்ள பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர், நில எடுப்பு குறித்தும், இழப்பீடு வழங்குதல் குறித்தும் நில உரிமையாளர்களிடம் பேசினார்.

பின்னர், நிலஅளவு குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, வட்டாட்சியர் செந்தில், மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர், வல்லம் பேரூராட்சி தலைவர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் உடனிருந்தனர்.

Updated On: 22 Oct 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது