ஆரணியில் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

ஆரணியில் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
X

ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் ராமசந்திரன் சிலம்பாட்டம் போட்டியை தொடங்கி வைத்தார்.

ஆரணி டவுன் கோட்டை மைதானத்தில் நடந்த சிலம்பாட்டம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானத்தில் ஆரணி சிலம்பாட்டம் அணி சார்பில் மாவட்ட அளவில் சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமசந்திரன் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்து சிலம்பாட்டம் போட்டியை தொடங்கி வைத்தார்.

சென்னை வேலூர் திருவண்ணாமலை விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள், மாணவ& மாணவிகள் போட்டியில் பங்கேற்று சிலம்பம் சுற்றி தங்களின் தனி திறமையை வெளிபடுத்தினார்கள்.

இதனை கண்ட சிலம்பம் ரசிகர்கள் பொதுமக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கு உற்சாகப்படுத்தினார்கள்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நினைவு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் தலைவரும், நகரமன்ற துணை சேர்மனுமான பாரிபாபு, ஒன்றிய செயலாளர்கள் திருமால், வக்கீல் சங்கர் மாவட்ட ஐ.டி. விங் சரவணன் கவுன்சிலர்கள் பானு, பாரதிராஜா சுதா குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி