/* */

அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பி மயங்கி விழுந்து மரணம்

சேத்துப்பட்டு அருகே அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பியும் சுடுகாட்டிலே மயங்கி விழுந்து மரணம்

HIGHLIGHTS

அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பி மயங்கி விழுந்து மரணம்
X

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை நேரு தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 64). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். நாராயணன் சேத்துப்பட்டு ஆரணி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

நாராயணனின் தம்பி வெங்கடேசன் (58). இவருக்கு திருமணம் ஆகவில்லை. வெங்கடேசன் நாராயணன் வீட்டில் வசித்து வந்தார். நாராயணன் கடந்த 19 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பி வெங்கடேசன் அழுதுக்கொண்டே இருந்தார்.

இந்த நிலையில் மதியம் நாராயணன் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆழந்த சோகத்தில் இருந்த வெங்கடேசன் திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் வெங்கடேசனை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு வெங்கடேசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் அங்கிருந்து வெங்கடேசன் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு நாராயணன் உடல் அருகே வெங்கடேசன் உடலும் தகனம் செய்யப்பட்டது. அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பியும் சுடுகாட்டிலே இறந்துவிட்டதால் அவரது உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Updated On: 20 Jan 2022 3:01 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...