/* */

ஆரணி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

ஆரணி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஆரணி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
X

ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

ஆரணி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேவிகாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேவிகாபுரம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய நாயகி சமேத கனககரேஸ்வரர், திருக்கோவில் விளங்கி வருகின்றது.

இந்த திருக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேவிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் தினதூரம் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் கோவில் குளம் அருகே கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசி வருவதாகவும் , சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் சில சமூகவிரோதிகள் அந்த குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் காற்று மாசு ஏற்பட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கண் எரிச்சல் , சுவாச பிரச்சனைகள் உள்ளிட்ட உடல் உபாதைகளால் மிகவும் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் தேவிகாபுரம் ஊராட்சி அலுவலகத்திற்கு முன்பு பாஜகவினர் கோவில் குளத்து அருகே குப்பைகளை அகற்ற வேண்டி ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கோவில் நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குளம் அருகே உள்ள குப்பைகளை அகற்றவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜகவினர் எடுத்துரைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மண்டல தலைவர் தேவராஜ், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் தாமோதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2023 2:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்