காதலி பேசுவதை நிறுத்தியதால் தூக்கில் தொங்கினார் நாதஸ்வர கலைஞர்

காதலி பேசுவதை நிறுத்தியதால் தூக்கில் தொங்கினார்  நாதஸ்வர கலைஞர்
X
திருவண்ணாமலை அருகே காதலி பேசுவதை நிறுத்தியதால் நாதஸ்வர கலைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் அதிகந்தூர் அடுத்த கடப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் நாகராஜ் (வயது16). இவர் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரத்தில் சண்முகம் என்பவர் வீட்டில் தங்கி நாதஸ்வர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். பயிற்சியின்போது நாகராஜ் திருமணம், கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்து இருக்கிறார். நாகராஜ் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுடன் செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பெண் இவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் நாகராஜ் மன உளைச்சலில் காணப்பட்டார்.

பயிற்சிகளை முடித்துவிட்டு மதியம் வீட்டு மாடிக்கு சென்றார். அங்குள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த நாகராஜை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து நாகராஜின் தந்தை கணேசன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?