/* */

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற நகராட்சி ஆணையாளர் உத்தரவு

ஆரணியில் முறையான கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படாததால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற நகராட்சி ஆணையாளர் உத்தரவு.

HIGHLIGHTS

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற நகராட்சி ஆணையாளர் உத்தரவு
X

மழைநீர் வடியாமல், பாசி படிந்து பச்சை நிறமாக காட்சியளிக்கும் சாலை

ஆரணி ஆரணிப்பாளையம் கே.சி.கே. நகர் விரிவாக்கப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சமீபத்தில் பெய்த கனமழையால் கழிவு நீரும், மழை நீரும், கால்வாய் நீரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ளது.

அங்கு முறையான கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படாததால், அந்த நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், புதிய நகராட்சி ஆணையாளரை இன்று சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

கோரிக்கை மனுவை பரிசீலனை செய்த புதிய நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி, உடனடியாக நகராட்சி ஊழியர்களை அனுப்பி, அந்தப் பகுதியில் சூழ்ந்துள்ள நீரை மோட்டார் வைத்து அகற்ற உத்தரவிட்டார்.

Updated On: 28 Nov 2021 1:34 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  3. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  4. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  5. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...