/* */

ஆரணி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு

ஆரணி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

ஆரணி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு
X

வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆரணி எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றியத்தில் ரூபாய் 1.42 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

ஆரணி ஊராட்சி ஒன்றியம் சங்கீதவாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 36.46 லட்சத்தில் நூலகம், ஆய்வுக்கூடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ரூபாய் 58 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சுகாதார நிலையத்திற்கு 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ உபகரணங்கள் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளை ஆரணி எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள், மருத்துவத் துறை பொறியாளர்கள், ஊராட்சி பொறியாளர்கள், ஊராட்சி மன்றத்தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Sep 2021 7:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  2. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  3. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  5. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  6. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  7. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  8. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  9. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  10. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...