/* */

ஆரணியில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் காயம் அடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஆரணியில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
X

ஜப்தி செய்ய்பட்ட அரசு பஸ்.

கலசபாக்கத்தை அடுத்த அரியாலை கிராமத்தைச் சேர்ந்த சின்ன பையன் மகன் சம்பத்து (வயது 27). இவர் கடந்த 2014-ம் ஆண்டு கலசபாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அரசு பஸ் மோதிய விபத்தில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2021ல், 7.54 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க, திருவண்ணாமலை மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், போக்கு வரத்துக் கழகம் இழப்பீடு வழங்காததால், மேல் முறையீட்டு மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க, கடந்த மாதம் உத்தரவிட்டது. எனினும், வழங்கப்படவில்லை

இதனை தொடர்ந்து ஆரணி சார்பு நீதிபதி தாவுதம்மாள், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து நீதிமன்ற ஊழியர் ஆரணி பழைய பஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு ஆரணியில் இருந்து சென்னை செல்லக்கூடிய பஸ் நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை ஜப்தி செய்வதற்கான நோட்டீஸ் ஓட்டப்பட்டது.

பஸ்ஸில் ஆரணி இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய பயணிகள் அமர்ந்திருந்தால் அவர்கள் நோட்டீசை ஒட்டியுடன் பஸ்சில் இருந்து கீழே இறங்கி வேறு பஸ்சில் ஏறினர்.

அதன்பின் ஜப்தி செய்ய்பட்ட அரசு பஸ் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

Updated On: 12 Jan 2023 1:15 AM GMT

Related News