ஆரணியில் பலத்த பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

ஆரணியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்
ஆரணி நகரில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி ஆரணி நகரம், சுற்றுப்புற கிராமங்களில் 99 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இந்து முன்னணி சாா்பில் சுமாா் 50 இடங்களிலும், ஆரணி நகரத்தில் 20 இடங்களிலும் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் நேற்று மாலை நடைபெற்றது. ஊா்வலத்தை இந்து முன்னணி மாவட்ட செயலாளா் தாமோதரன் தலைமையில் கோட்டத்தலைவா் மகேஷ், நெல், அரிசி வியாபாரிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் நடராஜன் ஆகியோா் ஆரணி அண்ணாசிலை அருகிலிருந்து தொடங்கி வைத்தனா்.
ஊா்வலமானது, சிலம்பாட்டம், வீரதீர செயல்கள், விநாயகா், முருகன் உள்ளிட்ட சுவாமிகள் வேடமணிந்து மேளதாளம் முழங்க மாா்க்கெட் சாலை, பழைய பேருந்து நிலையம், வடக்கு மாட வீதி, ஷராப் பஜாா், எஸ்.எம் சாலை வழியாக, பையூரில் உள்ள பாறை குளத்தில் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டது.
இதற்காக, ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா் . மேலும், சிலை கரைக்கும் இடத்தில் தீயணைப்புத் துறை, மருத்துவத் துறையினா் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இதில், வியாபாரிகள் சங்கம் சாா்பில் ராஜன், செல்வம் மற்றும் இந்து முன்னணி நிா்வாகிகள் பாஜக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக ஊர்வலம் செல்லும் பாதையை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினர். கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் சவுந்திரராஜன் தலைமையில் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உள்பட 5 துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் சுப்பிரமணி, ராஜாங்கம் உள்பட 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
போளூா்:
சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் இந்து முன்னணி சாா்பில் பாஜ்ரவீதி, ராமலிங்க சுவாமி தெரு, வளையல்கார தெரு, சந்தைமேடு தெரு, புதுத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, விநாயகா் சிலைகளுக்கு கடந்த 5 நாள்களாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில், விநாயகா் சிலைகள் ஊா்வலம் நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளா் பூபாலன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி வேலூா் கோட்ட அமைப்பாளா் டிவி.ராஜேஷ், வேலூா் பொருளாளா் பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருமலை ஜெயின் மடாதிபதி தவளகீா்த்தி ஸ்வாமிஜி ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
ஊா்வலமானது, முக்கிய வீதிகள் வழியாக சென்று ஏரியில் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டது. இதில் இந்து முன்னணி நிா்வாகிகள் பாஜக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu