/* */

வெயிலில் தாகம் தணிக்கும் பழச்சாறு

கோடை கால வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பழவகைகள் மற்றும் கரும்பு சாறு மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

வெயிலில் தாகம் தணிக்கும் பழச்சாறு
X

தமிழகத்தில் கோடைக்கால வெயில் தொடங்கிய நிலையில் வெளியே வந்து செல்லும் பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாக்க பழவகைகள் மற்றும் கரும்புச்சாறு மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை ஆரணி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கோடை கால வெயிலில் இருந்து தங்களை பாதுகாக்கவும் கடுமையான வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்கவும் தர்பூசணி, கிர்ணி, போன்ற பழவகைகள் மற்றும் கரும்பு சாறு மீது ஆர்வம் காட்டி அதனை தேடி வந்து வாங்கி அருந்தி வருகின்றனர்.

இதனால் தற்போது பழ வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் பழவகைகள் மீது பொதுமக்களுக்கு உள்ள ஆர்வம் வியாபாரிகள் மத்தியில் வரவேற்பை பெற்று, பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டிருந்த நிலையில் பொது மக்கள் யாரும் வெளியே வராததினால் தர்பூசணி பழங்கள் கடந்த ஆண்டு விற்பனை இன்றி அழுகி வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டிருந்தாலும் கடந்த ஆண்டை போல் இல்லாமல் இந்த ஆண்டு தளர்வு களுடன் கூடிய விற்பனைகள் நடைபெறுவதால் பல வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 12 April 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  2. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  3. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  5. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  6. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  7. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  8. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  9. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...
  10. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...