/* */

கண்ணமங்கலம் அருகே சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறை

கண்ணமங்கலம் அருகே சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், தப்பி ஓடிய 3 பெண்கள் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கண்ணமங்கலம் அருகே சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறை
X

கண்ணமங்கலம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகள்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஆட்டுப்பாறை பீட், வீரப்பன் காடு வழி சரகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின் பேரில் சந்தவாசல் வனச்சரக அலுவலர் பி.செந்தில்குமார் தலைமையில் வனக்குழுவினர் ரோந்து சென்றனர்.

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் சந்தன கட்டைகளை செதுக்கி கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். வனத் துறையினரை பார்த்ததும் 6 பேரும் 12 சந்தன கட்டைகளை புதருக்குள் வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அவர்கள் விட்டுச்சென்ற சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து திருப்பத்தூர் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய அர்ஜூனன் (வயது 45), இவரது மனைவி வெள்ளச்சி (40), ஜெயசந்திரன் (28), இவரது மனைவி அஞ்சலை (20), துரைசாமி மகன் வெள்ளையன் (34), இவரது மனைவி பூங்கொடி (30) ஆகிய 6 பேரையும் தேடி வருகின்றனர்.

Updated On: 1 Nov 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!