/* */

ஆரணி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அசைவ உணவகம் மற்றும் ஓட்டல்கள் ஆரணி உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

ஆரணி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
X

ஆரணி  ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி கைலாஷ்குமார் திடீர் ஆய்வு செய்தார் 

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சிறுமியின் அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடிர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆரணி டவுன் பஜார் வீதி மார்க்கெட் வீதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அசைவ உணவகம் மற்றும் ஓட்டல்கள் ஆரணி உணவு பாதுகாப்பு அதிகாரி கைலாஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் 15-க்கும் மேற்பட்ட அசைவ உணவகங்களில் ஆய்வு செய்து ஷவர்மர் போன்ற சிக்கன் சம்மந்தபட்ட உணவை பரிசோதனைக்காக பறிமுதல் செய்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளன.

இதனை தொடர்ந்து ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள பலசரக்கு கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதனை கைப்பற்றி தலா ஒரு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 7 May 2022 1:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!