/* */

ஆரணி நகராட்சி அலுவலகத்தில் ஊதியம் வழங்கக்கோரி பணியாளர்கள் போராட்டம்

சம்பளம் வழங்கப்படாததால், வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படுவதாக கூறி, இன்று காலை ஆரணி நகராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் போராட்டம்

HIGHLIGHTS

ஆரணி நகராட்சி அலுவலகத்தில் ஊதியம் வழங்கக்கோரி  பணியாளர்கள் போராட்டம்
X

ஆரணி நகராட்சி அலுவலகத்தில் ஊதியம் வழங்கக்கோரி பணியாளர்கள் போராட்டம்

ஆரணி நகராட்சி நிர்வாகம் உடனடியாக எங்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும் எனக் கூறி, இன்று காலை ஆரணி நகராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இவர்களுடன் இணைந்த பொறியியல் அலுவலக ஊழியர்கள், தங்களுடைய சம்பள பாக்கிகளையும் தருமாறு கேட்டனர்.

போராட்டத்தின் போது நகராட்சி ஆணையாளர் ராஜ விஜய காமராஜை, பணியாளர்கள் அனைவரும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் தரப்பில், 'கொரோனா காலம் என்பதால், ஆரணி நகராட்சி பகுதியில் சரியாக வரி வசூல் ஆகவில்லை. ஆகவே உங்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சம்பளம் கிடைக்க வழிவகை செய்யப்படும்' எனக்கூறப்பட்டது.

அதிகாரிகளின் அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தங்களுக்கு விரைவில் சம்பளம் கிடைக்கப்பெறும் என்ற எதிர்ப்பார்ப்போடு, நம்பிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வேதனையுடன் புறப்பட்டு சென்ற ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியம் கிடைக்கப்பெறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்

Updated On: 16 July 2021 6:24 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    'அனல் பறக்கும்': மக்களவை கூட்டத்தொடர் குறித்து பா.ஜ.,வுக்கு...
  2. இந்தியா
    பீகாரில் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்
  3. இந்தியா
    நீட் பிரச்சினையில் மௌனம் ஏன்? பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி
  4. சினிமா
    மருமகள் இன்றைய எபிசோட்!
  5. சினிமா
    மல்லி சீரியல் இன்றைய புரோமோ - ஜூன் 19, 2024
  6. சினிமா
    சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..!
  7. நாமக்கல்
    பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பயனடைந்த 95 ஆயிரம் விவசாயிகள்
  8. மதுரை மாநகர்
    மதுரையில், மறுவாழ்வு முகாம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகர தி.மு.க. 13-வது வார்டு சார்பில் ஐம்பெரும் விழா
  10. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் குடிநீர் குழாயில் இறைச்சி கழிவுகள் கலந்து வருவதாக...