/* */

முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்த ஆரணி பகுதியை சேர்ந்த நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேலப்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி விமர்சித்ததாக ஆரணி தாலுகா போலீஸில் ரவி என்பவர் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி செந்தில்குமார் தொடர்ந்த வழக்கை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று நடந்தது. அப்போது, செந்தில்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தனது பதிவுக்கு மன்னிப்பு கோரி செந்தில்குமார் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிபதி, மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 17 Jun 2022 2:23 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி