/* */

ஆரணி அருகே அடுப்பு பற்ற வைத்த போது சிலிண்டர் வெடித்து விபத்து

ஆரணி அருகே சமையல் செய்ய அடுப்பை பற்ற வைத்த போது சிலிண்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானது.

HIGHLIGHTS

ஆரணி அருகே அடுப்பு பற்ற வைத்த போது சிலிண்டர் வெடித்து விபத்து
X

சிலிண்டர் வெடித்து வீட்டின் மேற்கூறையில் இருந்த ஓடுகள் சேதமடைந்தது. 

திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி அடுத்த தசரா பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டாபி நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி லலிதா. இவர்கள் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இன்று காலை வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் திடீரென வெடித்தது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூறையில் இருந்த ஓடுகள் தரைமட்டமானது. வீட்டிலிருந்த பட்டாபி , லலிதா ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆரணி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

விபத்து நடந்த இடத்திற்கு வந்த வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் விஜயா, கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் ஆகியோர் தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த தீ விபத்தினால் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும் வருவாய் துறை சார்பாக அரிசி, சேலை, வேட்டி, மண்ணெண்ணெய், நிவாரண உதவியாக ரூ 5,000 ஆகியவற்றை வழங்கினர்.

Updated On: 22 May 2022 1:43 PM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  5. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  10. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...