ஆரணி டவுன் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை

ஆரணி டவுன் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை
X

ஆரணி போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

ஆரணி டவுன் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆரணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் தலைமையில் களப்பணியாளர்கள். கவச உடை அணிந்து, போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

தொடர்ந்து ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் மருத்துவக்குழுவினர், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ரூபன் குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தருமன், ரகு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் உள்பட அனைத்துப் போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture