/* */

ஒமிக்ரான் அறிகுறி பாதித்த பெண்ணின் சகோதரருக்கும் கொரோனா

ஆரணியை சேர்ந்த ஒமிக்ரான் அறிகுறி பாதித்த பெண்ணின் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஒமிக்ரான் அறிகுறி பாதித்த பெண்ணின் சகோதரருக்கும் கொரோனா
X

காங்கோ நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஆரணியை அடுத்த பையூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் தொடர் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சங்கீதாவின் தந்தை ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2-வது முறையாக அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியானது அதில் சங்கீதாவின் சகோதரர் சதீஷ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவரை சுகாதாரத்துறையினர் உடனடியாக திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது சம்பந்தமாக ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா தலைமையில் சுகாதார களப்பணியாளர்கள் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 21 Dec 2021 1:07 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  2. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  3. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  4. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!