ஆரணியில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆரணியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
கழிவுநீர் கால்வாயை சரி செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் பகுதியில் பஜனை கோவில் தெரு உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஊராட்சி சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டது. இங்கு அமைக்கப்பட்ட கால்வாயில் கழிவு நீர் செல்வதற்கு வழி இல்லாததால் வீடுகளின் அருகேவும், தெருக்களிலும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், நகராட்சியிலும் கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு அளித்துள்ளனர்.
இந்த கழிவுநீர் அருகே உள்ள சேவூர் கிராம வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஜனை கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் கூறினர். ஆனால் இதற்கு சேவூரை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பஜனை கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை ஆரணி- வேலூர் சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
அதன் காரணமாக ஆரணி-வேலூர் இடைேய போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் நெரிசலில் சிக்கிக்கொண்டன. மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியவர்கள் உடனடியாக லெ்ல முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் வருகை தந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீர் கால்வாய் இணைப்பு பணியை முறையாக முடிக்க ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.
அதில் சமரசம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu