பெண்ணின் கழுத்தில் இருந்த நகை பறிப்பு: பீகார் வாலிபர் கைது

பெண்ணின் கழுத்தில் இருந்த நகை பறிப்பு: பீகார் வாலிபர் கைது
X

பைல் படம்.

பெரணமல்லூர் அருகே பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறித்த பீகார் வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்:

பெரணமல்லூர் அருகே பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறித்த பீகார் வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த செங்கம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை (வயது 41). இவர் நிலத்துக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மோனிஷ்குமார் (26) என்பவர் உங்கள் வீட்டில் உள்ள பூஜை சாமான்களுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி நைசாக பேசியுள்ளார்.

அப்போது திடீரென அஞ்சலை கழுத்தில் இருந்த நகையை பறித்தார். வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்த முருகனுடைய மகன் கார்த்திக், சுப்பிரமணியினுடைய மனைவி பாஞ்சாலை மற்றும் பொதுமக்கள் மோனிஷ்குமாரை பிடித்து பெரணமல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோனிஷ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு:

ஆரணி கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரிக்கரை அருகே வசித்து வருப்பவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி களம்பூர் பகுதியில் மரப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் காலை வீட்டின் அருகே செல்வம் என்பவருடைய நிலத்தில் உள்ள தரை கிணற்றில் கிருஷ்ணமூர்த்தி குளிக்க சென்றார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்து உள்ளே இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினார்.

நீண்ட நேரம் அவர் வராததால், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் கிணற்றில் குதித்து தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தண்ணீரில் மூழ்கிய கிருஷ்ணமூர்த்தியின் உடலை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து வள்ளியம்மாள் ஆரணி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தற்கொலை:

திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் வானவில் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராம்கி (வயது 33). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுகன்யா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ராம்கி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராம்கி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!