/* */

ஆரணி: அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு டாக்டரின் தம்பி தற்கொலை

ஆரணியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு டாக்டரின் தம்பி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

ஆரணி: அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு டாக்டரின் தம்பி தற்கொலை
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48). இவர் ஆரணி புது மசூதி தெருவில் உள்ள இவரது அண்ணன் நக்கீரன் மருத்துவமனையில் மருந்துக்கடை நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் மருந்து கடையை விட்டு விட்டு, அதே மருத்துவமனையில் உள்ள மருந்துக்கடையில் மருந்தாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு அவரது அண்ணன் டாக்டர் நக்கீரன் வீட்டுக்குச் சென்றதும், பாஸ்கர் மருந்து கடையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது, அவர் கதவில் எட்டி உதைக்கும் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று, கேட்டை உடைத்து பாஸ்கரை உயிருடன் மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Updated On: 27 April 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  2. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  5. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  10. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!