/* */

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து எதிர்காலத்தை இழக்க வேண்டாம் என அறிவுரை

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து எதிர்காலத்தை இழக்கவேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை கூறினார்.

HIGHLIGHTS

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து எதிர்காலத்தை இழக்க வேண்டாம் என அறிவுரை
X

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேசினார்.

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 27 இளைஞர்கள், தனி வாகனத்தில் நேற்று இரவு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம் ஆரணியில் நடைபெற்றது. கோட்டாட்சியர் கவிதா தலைமை வகித்தார். வட்டாட்சியர் பெருமாள், காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் பேசும்போது, "அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிவிட்டது. இதில், இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்று, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது. அறப்போராட்டம் செய்பவர்கள்தான், தமிழக இளைஞர்கள். வன்முறைகளில் ஈடுபடமாட்டார்கள். அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போராட்டத்தில் பங்கேற்காமல், தமிழக இளைஞர்கள் அமைதிகாக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்த விரும்பினால், காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்பி, போராட்டத்துக்கு இளைஞர்கள் ஆதரவு கொடுக்க வேண்டாம். பிரச்சினை குறித்து முழுமையாக தெரியாமல் பங்கேற்க வேண்டாம். நாட்டின் சொத்து இளைஞர்கள் தான். வதந்திகளை நம்பி, பிரச்சினையில் சிக்கிக்கொண்டு எதிர்காலத்தை இழக்க வேண்டாம்.

ராணுவம், கடற்படை, விமான படை உள்ளிட்ட அரசு துறைகளில் வேலைக்கு செல்லும்போது, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து நற்சான்று பெறுவது அவசியம். போராட்டத்தில் ஈடுபட்டு, வழக்குகளில் சிக்கிக் கொண்டால் மத்திய, மாநில அரசுகளில் வேலையில் சேர முடியாத நிலை ஏற்பட்டுவிடும். வேலைவாய்ப்பு தொடர்பான உதவிகள் மற்றும் சந்தேகங்கள் ஏற்பட்டால் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

Updated On: 20 Jun 2022 11:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?