/* */

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரம் பறிப்பு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரத்தை நீக்கி ஆட்சியர் உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரம் பறிப்பு
X

 திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அத்திமலைப்பட்டு ஊராட்சியில் பிரதமரின் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்க பயனாளிகளிடம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் பணம் கேட்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்திருந்தனர்.

வீடு கட்டும் பணி ஆணை வழங்க பயனாளிகளிடம் தலா 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் லஞ்சம் அளித்த ஒருசில பயனாளிகள் தவிர மற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரின் அதிகாரத்தை நீக்கி ஆட்சியர் உத்தரவிட்டார். ஊராட்சி செயலாளர் ரமேஷ் பணியிடை நீக்கம் செய்தும் திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார் .

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் பெற்ற புகார்,விசாரணைக்குப் பின் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 May 2022 11:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்