/* */

ஆரணி அருகே சுதந்திர தின அணிவகுப்பில் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

ஆரணி அருகே நடைபெற்ற தேசிய கொடி அணிவகுப்பில் 5 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

ஆரணி அருகே சுதந்திர தின அணிவகுப்பில் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
X

தேசிய கொடியுடன் கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தில்உள்ள ஏ.சி.எஸ் கல்வி குழும பொறியியல் கல்லூரியில் ஏ.சி.சண்முகம் வழிகாட்டுதலின்படி 75வது சுதந்திர தின அணிவகுப்பு விழா நடைபெற்றது.

பொறியியல் கல்லூரி முதல்வர் திருநாவுகரசு அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு கல்லூரி குழும செயலாளர்கள் ஏ.சி.பாபு, ஏ.சி.ரவி, ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி கோட்டாச்சியர் தனலட்சுமி பங்கேற்றார்.

பின்னர் ஆரணி கோட்டாச்சியர் தனலட்சமி தேசிய கொடியை மாணவர்களுக்கு வழங்கி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். பள்ளி மைதானம் முழுவதும் தேசிய கொடியை ஏந்தி மாணவர்கள் உற்சாகத்துடன் அணிவகுப்பு நடத்தி ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் சமர்பணம் செய்தனர்.

மேலும் பொறியியல் கல்லூரி மைதானத்தில் பாலிடெக்னிக், பள்ளி ,மாணவ மாணவிகள், கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து ஓரே நேரத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி கொடியை அசைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தாசில்தார் ஜெகதீசன், பேராசிரியர் சிவா, பள்ளி கல்லூரி முதல்வர்கள் வையாபுரி, செலின்திலகவதி, ரஞ்சினி, அருளாளன், நிர்வாக அலுவலர் கார்த்திக்கேயன், துணை தாசில்தார்கள் கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் பாலிடெக்னிக் முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

Updated On: 13 Aug 2022 10:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு