/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7வது கட்ட தடுப்பூசி முகாமில் 78,097 பேருக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,075 இடங்களில் நடைபெற்ற 7வது கட்ட தடுப்பூசி முகாமில் 78,097 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7வது கட்ட  தடுப்பூசி முகாமில் 78,097 பேருக்கு தடுப்பூசி
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் 

தமிழக அரசு கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து 6 வாரங்களாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 739 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது .

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் 7-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 1,075 இடங்களில் நடைபெற்றது. கண்காணிப்பு குழு அலுவலர்கள் முகாம் வாரியாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தடுப்பூசி போடும் பணியில் அனைத்துத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து பணியாற்றினர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் குறித்த பட்டியல் அடிப்படையில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை முகாமிற்கு அழைத்து வந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 1,075 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களில் 78 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Updated On: 31 Oct 2021 2:12 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!