/* */

திருத்தணி கோவிலில் படிக்கட்டுகள் அமைக்கும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருத்தணி கோயிலில் ராஜ கோபுரம் முதல் ரத வீதி வரை படிக்கட்டுகள் அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருத்தணி கோவிலில் படிக்கட்டுகள் அமைக்கும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

ராஜகோபுரம் முதல் ரத வீதி வரை படிக்கட்டுகள் அமைப்பதற்கான பணிக்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்

திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ராஜகோபுரம் முதல் ரத வீதி வரை படிக்கட்டுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு; தமிழகம் முழுவதும், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவை அனைத்தும் கையகப்படுத்தப்படும். திருத்தணி முருகன் கோவிலில், நீண்ட நாட்களாக பக்தர்களுடைய கோரிக்கையான மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், பக்தர்கள் தங்கக்கூடிய அறைகளும் சேதமடைந்து காணப்படுவதால், அதனை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Updated On: 31 March 2022 3:55 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்