/* */

உடுமலைப்பேட்டை: முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிப்பு

உடுமலைப்பேட்டையில் முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.

HIGHLIGHTS

உடுமலைப்பேட்டை: முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர்  இணைப்பு துண்டிப்பு
X

 உடுமலை அருகே முறைகேடு இணைப்பு துண்டிப்பு பணி நடந்தது.

உடுமலைப்பேட்டை அருகே உள்ள மடத்துக்குளம் ஒன்றியம் மெட்ராத்தி ஊராட்சியில் ராமேகவுண்டன்புதூரில் 200 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 1.94 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். துங்காவி, உடையாம்பாளையம் ஆகிய கீழ்நிலை தொட்டி மூலம் இந்த கிராமத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக சரியாக குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உடையார்பாளையம் பிரதான குழாயில் முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பு ஜேசிபி இயந்திரம் மூலம் துண்டிப்பு நடவடிக்கை அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டம் செய்தனர். தகவல் அறிந்த மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சந்திர குமார், தாசில்தார் ஜலஜா உடுமலைப்பேட்டை டிஎஸ்பி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் குடிநீர் வழங்க அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பேரில் போராட்டத்தை கைவிடப்பட்டது.

Updated On: 23 Sep 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  4. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  9. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  10. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?