/* */

உடுமலை: விலைபோகாத தக்காளி... கொள்முதல் செய்த தோட்டக்கலைத்துறை...

உடுமலையில் விலைபோகாத தக்காளிகளை தோட்டக்கலைத்துறையே கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச் அடைந்தனர்.

HIGHLIGHTS

உடுமலை: விலைபோகாத தக்காளி... கொள்முதல் செய்த தோட்டக்கலைத்துறை...
X

தக்காளி

உடுமலை சுற்று வட்டாரத்தில் தாக்காளி சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளி திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக தக்காளி அனுப்ப முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், விவசாய நிலங்களில் அப்படியே விட்டுவிட்டனர்.

உடுமலை பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், தோட்டக்கலை துறை சார்பில், ஆனைமலை பகுதியில் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் 155 வண்டிகளுக்கு தேவையான 200 பெட்டி தக்காளி கொள்முதல் செய்துள்ளனர். இதனால் உடுமலைப்பேட்டை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், உடுமலை சுற்று வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்பட்டது. தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக தக்காளி கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பல விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தக்காளி அறுவடை செய்யாமல் வயல்களிலேயே விட்டனர். இந்நிலையில் தோட்டக்கலை துறை சார்பில் 200 பெட்டி கொள்முதல் செய்தது மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு தேவையான தக்காளியை, தோட்டக்கலை துறை மூலம் இங்கு கொள்முதல் செய்தால் விவசாயிகள் பயன்பெறுவர், என்றனர்.

Updated On: 30 May 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’