/* */

அமணலிங்கேஸ்வரர் கோவிலை மூழ்கடித்த பஞ்சலிங்க அருவி

பஞ்சலிங்க அருவி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்வதால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

HIGHLIGHTS

அமணலிங்கேஸ்வரர் கோவிலை மூழ்கடித்த பஞ்சலிங்க அருவி
X

வெள்ளத்தில் மூழ்கிய அமணலிங்கேஸ்வரர் கோவில்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் கனமழை பெய்ய துவங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்கிடையே, உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பஞ்சலிங்க அருவில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கால் அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதி மற்றும் விநாயகர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் பாலத்தை கடந்து வெள்ளம் சென்று கொண்டு இருப்பதால் அப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது.


Updated On: 21 Oct 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்