/* */

உடுமலை அருகே அரசுப் பேருந்தில் மினி வேன் மோதி விபத்து: 23 பேர் காயம்

உடுமலை அருகே அரசுப் பேருந்தில் மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

உடுமலை அருகே அரசுப் பேருந்தில் மினி வேன் மோதி விபத்து: 23 பேர் காயம்
X

விபத்தில் சிக்கிய மினி வேன் மற்றும் அரசு பஸ்.

திருப்பூர் மாவட்டம், பூளவாடி பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனிக்கு உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கோட்டமங்கலம் ஊராட்சி வழியாக மினி வேன் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அப்போது உடுமலையில் இருந்து பெல்லம்பட்டிக்கு அரசு பேருந்து 8ஏ சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து பூளவாடி அருகே மேட்டு சாலை பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டுருந்தபோது, அதிவேகமாக வந்த மினி வேன் பேருந்தின் பின்பக்கம் மீது பயங்கரமாக மோதியது. இதனால் மினி வேன் முன்பக்கம் மற்றும் அரசு பேருந்து பின் பக்கம் பலத்த சேதம் அடைந்தது.

இதனால் மினி வேனில் பயணம் செய்த 22 பேருக்கும், அரசு பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ௨௦ பேர் உடுமலையில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் படுகாயம் அடைந்தவர்களில் 3 பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பபட்டு உள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த குடிமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 30 Sep 2021 8:11 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  2. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  3. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  4. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  5. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  7. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  9. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  10. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க