/* */

யாரா இருந்தா என்ன? உடுமலையில் அமைச்சர் கார் சோதனை

உடுமலையில் அமைச்சரின் காரையும் நிறுத்தி தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனையிட்டனர்.

HIGHLIGHTS

யாரா  இருந்தா என்ன?  உடுமலையில் அமைச்சர் கார் சோதனை
X

உடுமலையில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் காரை தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

தமிழக சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. எமுறையாக விதிமுறைகள் பின்பற்றப் படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ பதிவு குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் ஆங்காங்கு திடீர் சோதனைகளை நடத்துவார்கள்.

அந்த வகையில் நேற்று உடுமலை நகரில் தளி சாலையில் டி.வி.பட்டிணம் அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் உடுமலை சட்டமன்றத்தொகுதி அ.தி.மு.க.வேட்பாளரும், கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பிரசத்திற்காக தளி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பறக்கும்படையினர் அமைச்சரின் காரையும் மற்ற கார்களை போலவே சோதனை செய்தனர். ஆனால் அமைச்சரின் காரில் பணமோ, பரிசுப்பொருட்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த சோதனைக்கு பின்னர், அவர் பிரசாரத்திற்கு சென்றார்.

Updated On: 30 March 2021 7:01 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  2. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  3. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  4. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  5. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  6. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  7. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  8. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்